திரித்துவத்தை குர்ஆன் தப்பாக விபரிக்கிறதா?
குர்ஆன் திரித்துவம் விசயத்தில் தவறிழைக்கிறதா? - பாமர கிறிஸ்தவர்களுக்கு மறுப்பு. குர்ஆன் திரித்துவம் பற்றி பேசும்போது, திரித்துவத்தில் இல்லாத மரியாளையும் நாங்கள் கடவுளாக வணங்குவதாக கூறுகிறது என்று சில பாமர கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். உண்மையில் திரித்துவத்தில் மரியாள் ஒரு நபர் என்று கூறுகிறதா குர்ஆன்? நாம் அலசலாம். குர்ஆனில் எங்குமே மரியாள் திரித்துவத்தில் ஒரு நபர் என்று கூறவில்லை. அதாவது மரியாளும் இயேசுவும் அல்லாஹ்வும் ஒரே கடவுளாக இருக்கிறார்கள் என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள் என்றோ அல்லது அல்லாஹ் மரியாளாகவும் இயேசுவாகவும் உலகத்தில் வந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள் (ஆள்மாறாட்ட கொள்கை) என்றோ கூறவில்லை! மாறாக, அரேபியாவில் அப்போது இருந்த கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளாக நம்பிய அதேநேரம் மரியாளையும் சில பிரிவுகள் வணங்கி வந்தனர். இன்றும் கத்தோலிக்கர்கள் மரியாளிடம் நமக்காக வேண்டிக்கொள்ளும் என்று கூறுவோராக உள்ளனர். அத்தோடு அவரை கடவுளின் தாய் என்றே நம்புகின்றனர். அக்காலத்தில் இருந்த கிறிஸ்தவர்கள் மரியாளையும் இயேசுவையும் அல்லாஹ்வுக்கு மேலதிகமாக வணங்கி அவர்களிடம் உதவி தேடியதையே குர்ஆன் கண